புதுக்கோட்டையில் மழை: ஆவுடையார்கோவிலில் 120 மி.மீ. மழை பதிவு

2 hours ago 3

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு அதிகபட்சமாக ஆவுடையார்கோவிலில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டையில் நேற்று இரவு லேசான காற்றுடன் மழை பெய்ததால் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நீண்ட நேரம் மின் தடை ஏற்பட்டது. மேலும், புதுக்கோட்டையில இருந்து கைக்குறிச்சி வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் 4 வழிச்சாலை பணியையொட்டி வீடுகளைச் சுற்றிலும் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.

Read Entire Article