புதுக்கோட்டை: ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்த முயன்றவர் கைது

1 day ago 2

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவர் போதைப்பொருள் கடத்தலில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவரை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர் நாகையில் இருந்து புதுக்கோட்டை வழியாக ராமநாதபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை புதுக்கோட்டை அருகே மடக்கிய மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அவரது காரை சோதனை செய்தனர். அதில், ரூ.8 கோடி மதிப்பிலான 95 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. அவரை சிறையில் அடைத்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர்.

Read Entire Article