புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

2 months ago 10

 

புதுக்கோட்டை,நவ.22: புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக வரும் 30ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் 15.8.2024 சுதந்திர தினவிழா உரையில், \”பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் “ என அறிவித்தார். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm/D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தற்போது பொதுமக்கள் நலன் கருதி வரும் 30ம்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article