புதுக்கோட்டை ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போருக்கான தேர்வு

6 months ago 18

புதுக்கோட்டை, நவ.11: புதுக்கோட்டை ஒன்றியத்தில் வயதுவந்தோருக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போருக்கு நடைபெற்ற தேர்வில் 63 மையங்களில் 1350 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை ஒன்றியத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் திட்டத்தின் கீழ் செயல்படும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போருக்கான தேர்வானது நேற்று 63 மையங்களில் 1350 கற்போருக்கு நடைபெற்றது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் சின்னையாசத்திரம்,இச்சடி, மணவிடுதி, ஏ.மாத்தூர், தொண்டைமான் விடுதி போன்ற மையங்களை ஆய்வு செய்தார். மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள்,மாவட்ட உதவி திட்ட அலுவலர், பள்ளி துணை ஆய்வாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகிய அனைவரும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு மையங்களை பார்வையிட்டனர். கற்போர் அனைவரும் ஆர்வமுடன் தேர்வினை எழுதினர்.

The post புதுக்கோட்டை ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போருக்கான தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article