புதுக்கடை அருகே கோயிலில் திருட்டு

2 weeks ago 4

புதுக்கடை, ஜன.18: புதுக்கடை அருகே கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கடை அருகே பூட்டேற்றி பகுதியில் கண்ணத்தான்குழி பத்ரேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் காலை மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் சம்பவ தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடியுள்ளனர். இது தொடர்பாக கோயில் தலைவர் ஜஸ்டின் குமார் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post புதுக்கடை அருகே கோயிலில் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article