புதிய மதுபான ஆலைகளுக்கு எதிர்ப்பு: புதுச்சேரி பேரவை படிக்கட்டுகளில் பாஜக, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தர்ணா!

3 hours ago 1

புதுச்சேரி: புதிய மதுபான ஆலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவை படிக்கட்டுகளில் அமர்ந்து பாஜக, ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை இன்று (பிப்.12) காலை கூடியது. புதுவை சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க வந்த பாஜக எம்.எல்.ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் அங்காளன், சிவசங்கர், சீனிவாச அசோக், ஆகியோர் சட்டப்பேரவைக்குள் செல்லாமல், நுழைவு வாயில் முன்பு படிக்கட்டுகளில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “வேண்டாம், வேண்டாம், புதுவைக்கு மதுபான தொழிற்சாலைகள் வேண்டாம். புதுவை மக்களை பாதிக்கும் மதுபான தொழிற்சாலைகள் வேண்டாம். புதுவை மக்களை மதுபான தொழிற்சாலைகளில் இருந்து காப்பாற்று” எனக் கூறி கோஷங்களை எழுப்பினர்.

Read Entire Article