புதிய போக்குவரத்து திட்டங்களுக்கு அனுமதி பெற முதல்வர் தலைமையில் விரைவில் போக்குவரத்து ஆணைய கூட்டம்

8 hours ago 5

சென்னை: ​முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் சென்னை பெருநகர போக்​கு​வரத்து ஆணைய கூட்​டம் விரை​வில் நடை​பெற உள்​ளது. இதில், சென்​னை​யில் ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து திட்​டங்​களுக்கு ஒப்​புதல் பெறப்பட உள்​ளது.

நாட்​டில் போக்​கு​வரத்து வசதி​களை மேம்​படுத்​தும் வகை​யில், தேசிய நகர்ப்​புற போக்​கு​வரத்து கொள்​கையை மத்​திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு வெளி​யிட்​டது. இதன்​படி, ஒவ்​வொரு மாநிலத்​தி​லும் ஒருங்​கிணைந்த பெருநகர போக்​கு​வரத்து ஆணை​யம் ஏற்​படுத்த வேண்​டும் என அறி​வுறுத்​தப்​பட்​டது. அந்த வகை​யில், சென்னை ஒருங்​கிணைந்த பெருநகர போக்​கு​வரத்து ஆணை​யம் (‘கும்​டா’) கடந்த 2010-ம் ஆண்டு அமைக்​கப்​பட்​டது. எனினும், 2021-ம் ஆண்​டுக்கு பிறகே, தனி​யான நிர்​வாக அமைப்​புடன் இந்த அமைப்பு செயல்பட தொடங்​கியது.

Read Entire Article