புதிய படங்களை நவம்பர் 1 முதல் தொடங்க வேண்டாம்: தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவு

3 months ago 13

சென்னை: வரும் நவம்பர் 1ம் தேதி முதல் புதிய படங்களை தொடங்க வேண்டாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: நடிகர்கள், டெக்னீஷியன்கள் சம்பளம், படப்பிடிப்புக்கு ஆகும் செலவுகள் குறைத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி ஆகிய அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை முழுமை அடையும் வரை, தயாரிப்பாளர் சங்கம் மூலம் புதிய அறிவிப்பு வெளியாகும் வரை, நவம்பர் 1ம் தேதி முதல் புதிய படங்களின் வேலைகள், படப்பிடிப்புகள் தொடங்க வேண்டாம் என்ற முடிவு தொடர்கிறது.

இந்த முடிவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 1ம் தேதி முதல் திரைத்துறை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்ற முடிவை தயாரிப்பாளர்கள் கைவிட்டுள்ளனர். இதனால் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

 

The post புதிய படங்களை நவம்பர் 1 முதல் தொடங்க வேண்டாம்: தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article