புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற வாலிபர் கைது

3 months ago 7

திருவேங்கடம்,பிப்.10: திருவேங்கடம் எஸ்ஐ சஞ்சய் காந்தி மற்றும் போலீசார் திருவேங்கடம் – ராஜபாளையம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் திருமண மண்டபம் அருகே காட்டு பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சிவகாசி அருகே சித்துராஜபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் அருண்குமார் (27) என்பதும், டிரைவரான இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை திருவேங்கடம் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து அருண்குமாரை கைது செய்து ரூ.13 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை சிறையில் அடைத்தனர்.

The post புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article