
புதுடெல்லி,
பீகார் மாநிலம் பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை குறித்து காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்காவை வெளிப்படையாக சுட்டுக் கொன்ற சம்பவம், பாஜகவும் நிதிஷ் குமாரும் இணைந்து பீகாரை "இந்தியாவின் குற்றத் தலைநகராக" மாற்றியுள்ளனர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
பீகார் மாநிலம் இன்று, கொள்ளை, துப்பாக்கிச் சூடு மற்றும் கொலையின் நிழலில் வாழ்கிறது. குற்றம் இங்கே புதிய வழக்கமாகிவிட்டது. அரசாங்கம் அங்கு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
பீகாரின் சகோதர சகோதரிகளே, இந்த அநீதியை இனி பொறுத்துக்கொள்ள கூடாது. உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத அரசாங்கம் உங்கள் எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்க முடியாது.
ஒவ்வொரு கொலையும், ஒவ்வொரு கொள்ளையும், ஒவ்வொரு தோட்டாவும் - மாற்றத்திற்கான கூக்குரல். இப்போது ஒரு புதிய பீகாருக்கான நேரம் - அங்கு முன்னேற்றம் இல்லை, பயம் இல்லை. இந்த முறை நீங்கள் செலுத்தும் வாக்கு.. அரசாங்கத்தை மாற்றுவதற்கு மட்டுமல்ல, பீகாரை காப்பாற்றுவதற்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.