பீகாரில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணியின்போது விபத்து.. 3 ஊழியர்கள் உயிரிழப்பு; 8 பேர் படுகாயம்..!!

3 months ago 13

பீகார்: பீகாரில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாட்னாவில் காவல் நிலையம் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கத்துக்குள் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தபோது கட்டுமான பொருட்களை எடுத்து சென்ற லோகோ எந்திரம் திடீரென பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து தொழிலாளர்கள் மீது மோதியது.

இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட 8 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கவனமின்மையே விபத்துக்கான காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் 3 பேர் உயிரிழந்ததால் மன வேதனைக்குள்ளான சக ஊழியர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என மெட்ரோ நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post பீகாரில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணியின்போது விபத்து.. 3 ஊழியர்கள் உயிரிழப்பு; 8 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article