
சென்னை,
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்து 344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழ் பாடத்தில் 135 பேர் 100 க்கும் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக அரியலூர் உள்ளது. 98.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதம் பள்ளி வாரியாக:
அரசு பள்ளிகள்; 91.94 சதவீதம்
அரசு உதவி பெறும் பள்ளிகள்: 95.71 சதவீதம்
தனியார் பள்ளிகள்: 98.88 சதவீதம்
மாவட்ட வாரியாக:
அரியலூர்: 98.82
ஈரோடு: 97.98
திருப்பூர்: 97.53
கோவை: 97.48
கன்னியாகுமரி: 97.01
பாடவாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை
தமிழ்: 135
இயற்பியல்: 1,125
வேதியியல்: 3,181
உயிரியல்: 827
கணிதம்: 3,022
தாவரவியல்; 269
விலங்கியல்: 36
கணிணி அறிவியல்: 9,536
கணக்குப்பதிவியல்: 1,240
பொருளியல்: 556
கண்ணி பயன்பாடுகள்: 4,208
வணிகம் கனிதம் மற்றும் புள்ளியியல்: 273