பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு நாளில் தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவர்

1 day ago 2

 

புதுக்கோட்டை, மார்ச் 26: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடி ஊராட்சியைச் சேர்ந்த தெற்கு இமனம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பழனிவேல்(55). இவர் புதுக்கோட்டை மச்சிவாடி பகுதியில் கால்நடை பண்ணையில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு வரும்போது திருக்கட்டளை அருகே எதிரே வந்த ஐஸ் வியாபாரி ராம்மூர்த்தி சைக்கிளின் மீது இவரதுஇருசக்கர வாகன மோதியதில் இரண்டு பேரும் சாலையில் தவறி விழுந்தனர். இதில் பழனிவேல் சம்பவ இடத்திலேயே பலத்த அடிபட்டு உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கணேஷ்நகர் போலீஸ்சார் இறந்த பழனிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவரது மகன் கார்த்திகேயன் திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வருகின்றார். நேற்று நடந்த பொது தேர்வை தந்தை இறந்த சோகத்திலும் பொதுத்தேர்வு எழுதினார். பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் வரவேற்று தேர்வு எழுத ஆறுதல்கூறி அனுப்பி வைத்தனர்.

The post பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு நாளில் தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவர் appeared first on Dinakaran.

Read Entire Article