பிளஸ் 1 மாணவி கூட்டு பலாத்காரம் 3 பேர் கைது

1 week ago 8

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொளகம்பட்டியை சேர்ந்தவர் வேலன் (27). இவர், அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவியிடம் பழகியுள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதேபோல், வேப்பம்பட்டி நித்திஷ்குமார் (21), பாப்பிசெட்டிப்பட்டியை சேர்ந்த ஜெய்சங்கர் (30) ஆகியோரும் சில மாதங்களுக்கு முன் மாணவியிடம் பழகி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து புகாரின்பேரில் அரூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.

The post பிளஸ் 1 மாணவி கூட்டு பலாத்காரம் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article