![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37946675-pcipf.webp)
மணிலா,
பிலிப்பைன்ஸின் தெற்கே மகுவின்தனாவோ டெல் சுர் மாகாணத்தில் பீச் கிங் ஏர் 350 ரக தனியார் விமானம் ஒன்று இன்று மதியம் 2 மணியளவில் விபத்தில் சிக்கியது. இதில் வெளிநாடுகளை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 ஆண்கள் உள்ளிட்ட 4 பேரின் உடல்களை கிராமவாசிகள் கண்டறிந்தனர். அவற்றை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.