பிலிப்பைன்ஸில் விமான விபத்து; 4 பேர் பலி

3 hours ago 2

மணிலா,

பிலிப்பைன்ஸின் தெற்கே மகுவின்தனாவோ டெல் சுர் மாகாணத்தில் பீச் கிங் ஏர் 350 ரக தனியார் விமானம் ஒன்று இன்று மதியம் 2 மணியளவில் விபத்தில் சிக்கியது. இதில் வெளிநாடுகளை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியானார்கள்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 ஆண்கள் உள்ளிட்ட 4 பேரின் உடல்களை கிராமவாசிகள் கண்டறிந்தனர். அவற்றை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Read Entire Article