
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3வது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஆஸ்திரியாவின் டரியா கசட்கினா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கசட்கினா 6-1, 7-5 என்ற செட்களில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீராங்கனையான பவுலா படோசா தொடரில் இருந்து வெளியேறினார்.