
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ஜானிக் சின்னெர் (இத்தாலி) - ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷியா) ஆகியோர் மோதினர்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர் 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.