
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, லாட்வியன் வீராங்கனை ஜெலினா ஸ்டாபென்கோ உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய எலெனா ரைபகினா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.