
பாரீஸ்,
ஆண்டின் 2-வது 'கிராண்ட்ஸ்லாம்' தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை டை பிரேக்கர் வரை போராடி கைப்பற்றிய சபலென்கா 2-வது செட்டை இழந்தார். இதனையடுத்து நடைபெற்ற 3-வது செட்டை சபலென்கா எளிதில் கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் சபலென்கா 7-6, 4-6 மற்றும் 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இதில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் கோகோ காப் (அமெரிக்கா), 6-1, 6-2 என்ற நேர் செட்டில் லூயிஸ் பாய்சோனை (பிரான்ஸ்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா- கோகோ காப் மோத உள்ளனர்.