
பாரிஸ்,
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் மிட்செல் க்ரூகர் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுமித் நாகல் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் மிட்செல் க்ரூகரை வீழ்த்தி அடுத்த தகுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் அடுத்த தகுதி சுற்றில் சுமித் நாகல் ஆஸ்திரியாவின் ஜூரிஜ் ரோடியோனோவை எதிர்கொள்கிறார்.