
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றி முன்னாள் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச், பிரெஞ்சு வீரரான கோரன்டின் மவுடெட் உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-2 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர் 3-வது சுற்றில் பிலிப் மிசோலிக் உடன் மோத உள்ளார்.