பிரபல ரவுடி சீர்காழி சத்யாவை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

3 months ago 10

சென்னை: மாமல்லபுரத்தில் பாஜ வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர், பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வந்த ரவுடி சீர்காழி சத்யாவை போலீசார், கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், சீர்காழி சத்யா குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.‌குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சத்யாவின் தாய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சத்யாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்தனர்.

தொடர்ந்து, சீர்காழி சத்யா திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை நிறைவேற்றாததால் சீர்காழி சத்யாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்த உத்தரவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரும்ப பெற்றனர். இதன் அடிப்படையில் மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான தனிப்படையினர் தலைமறைவாக உள்ள சீர்காழி சத்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

The post பிரபல ரவுடி சீர்காழி சத்யாவை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article