பிரதமர் மோடியுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு: பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு

2 months ago 9

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்க உள்ள ஹேமந்த் சோரன் பிரதமர் மோடியை சந்தித்து பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஜார்க்கண்ட் பேரவைக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் நாளை பதவி ஏற்க உள்ளார். ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவியும், கண்டே தொகுதி பேரவை உறுப்பினருமான கல்பனா சோரன் ஆகியோர் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது ஜார்க்கண்ட் முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தனர்.

The post பிரதமர் மோடியுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு: பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article