புதுடெல்லி: பிரதமர் மோடி பிப்.12 முதல் 2 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கின்றார். அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி, பின்னர் அமெரிக்க அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளையும் சந்திக்கிறார். அதிபர் டிரம்ப் பதவியேற்றபின் முதல் முறையாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்வது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரதமர் மோடி வருகிற 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் ஏஐ உச்சி மாநாட்டில் அதிபர் மேக்ரானுடன் இணைந்து தலைமை வகிக்கிறார். அப்போது பிரதமர், சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலை அமைந்துள்ள கேடராச்சையும் பார்வையிடுவார். பின்னர் இருவரும் மார்செய்லிக்கு சென்று அங்குள்ள இந்திய துணை தூதரகத்தை திறந்து வைப்பார்கள். இந்த தகவலை வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
The post பிரதமர் மோடி பிப்.12ல் அமெரிக்கா பயணம்: அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசுகிறார் appeared first on Dinakaran.