சென்னை: ‘பிங்க்’ ஆட்டோ திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் சென்னையில் 250 பெண் ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியத்துடன் ‘பிங்க்’ ஆட்டோக்களை இயக்கும் திட்டம் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.