சென்னை: பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (என்சிஎச்எம் ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26ம் கல்வியாண்டுக்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 15ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
ஆனால் விண்ணப்பிக்கும் அவகாசம் பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் /exams.nta.ac.in/NCHM/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்கலாம். இதுசார்ந்த கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000/69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
The post பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் படிப்பு: விண்ணப்ப பதிவு பிப். 28ம் தேதி வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.