பி.எஸ்.எல்.வி. சி-59 : லிப்ட் ஆப் மற்றும் செயற்கைக்கோள் பிரிக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்த இஸ்ரோ

6 months ago 20

ஸ்ரீஹரிகோட்டா ,

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் 'புரோபா-3' என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி இருந்தது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த புதன்கிழமை(04.12.2024) மாலை 4.08-க்கு மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் வியாழக்கிழமைக்கு (05.12.2024) ஒத்திவைக்கப்பட்டது.

புரோபா-3 செயற்கைக்கோளில் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.பின்னர் அது சரிசெய்யப்பட்டு வியாழக்கிழமை(05.12.2024) மாலை 4.04 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிலையில் தற்போது பி.எஸ்.எல்.வி. சி-59 மிஷனின் வெற்றிகரமான லிப்ட் ஆப் மற்றும் செயற்கைக்கோள் பிரிக்கப்பட்ட வீடியோவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.

PSLV-C59/Proba-3 Mission - Liftoff, PSOM Separation, Stage Ignition & Satellite Separation Video pic.twitter.com/oxaJrMmObi

— ISRO (@isro) December 7, 2024

இதன் மூலம் விண்வெளியில் சூரியனின் மங்கலான கரோனாவின் தடையற்ற காட்சிகளை அறிவியல் ஆராச்சிக்கு பெரிதும் உதவும்.

Read Entire Article