பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாம், தேடியும் கிடைக்கவில்லையாம்; புதிய பாஸ்போர்ட் வழங்க கோரி சீமான் வழக்கு: மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

6 hours ago 1

சென்னை: பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மண்டல பாஸ்போர் அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்தது. அதனை தேட தீவிர முயற்சி செய்தும், கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், புதிய பாஸ்போர்ட்டை வழங்கக் கோரி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்த போது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி, தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், புது பாஸ்போர்ட் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மண்டல பாஸ்போர்ட் அதிகாரியும், நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளரும் அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாம், தேடியும் கிடைக்கவில்லையாம்; புதிய பாஸ்போர்ட் வழங்க கோரி சீமான் வழக்கு: மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article