பால்குட ஊர்வலத்தில் திரண்ட பக்தர்கள்

3 months ago 11

 

நாமகிரிப்பேட்டை, நவ.18: நாமகிரிப்பேட்டை அருகே அரியாகவுண்டம்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஐந்து முனியப்பன் கோயிலில், கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை முதல் சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், திருமஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் பல்வேறு அபிேஷகம் நடைபெற்றது. மதியம் 200க்கும் மேற்பட்ட ஆண்-பெண்கள் பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். பழைய பி.டி.,ஓ., ஆபிஸ் முன்பிருந்து ஊர்வலம் தொடங்கியது. ஆத்தூர் மெயின் ரோடு, அரியாகவுண்டம்பட்டி ரோடு வழியாக கோயிலை அடைந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post பால்குட ஊர்வலத்தில் திரண்ட பக்தர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article