பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. துணை பொதுச்செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.