பாலியல் புகாரில் காவல் இணை ஆணையர் சஸ்பெண்ட்: பொய் புகார் அளித்ததாக பெண் போலீஸ் மீது மனைவி குற்றச்சாட்டு

1 week ago 3

சென்னை: பாலியல் குற்​றச்​சாட்​டால் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்ட இணை ஆணையர் மீது சம்பந்​தப்​பட்ட பெண் போலீஸ் வீடு கட்ட ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி பொய்புகார் அளித்​துள்ளதாக அவரது மனைவி தெரி​வித்​துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி அலுவல​கத்​தில் புகாரும் அளித்​துள்ளார்.

சென்னை போக்கு​வரத்து காவல் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்கு​மார், தனக்கு பாலியல் தொந்​தரவு அளிப்​பதாக பெண் போலீஸ் ஒருவர் டிஜிபி​யிடம் புகார் அளித்​திருந்​தார். இதன்​பேரில் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யின் அடிப்​படை​யில் மகேஷ்கு​மாரை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலர் தீரஜ்கு​மார் உத்தர​விட்​டார். மேலும் அவருக்கு உடந்​தையாக இருந்​ததாக மாதவரம் போக்கு​வரத்து காவல் ஆய்வாளர் சக்திவேலை காத்​திருப்​போர் பட்டியலுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றினார்.

Read Entire Article