ஜெயலலிதா என்னும் ஆளுமையை எந்த அளவுக்கு ‘மிஸ்’ செய்கிறது தமிழக அரசியல்?

3 hours ago 2

பிப்.24... இன்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த தினம். தமிழக அரசின் சார்பில் மரியாதை, அதிமுகவின் பிரம்மாண்ட கொண்டாட்டம், அதிமுக உரிமை மீட்புக் குழு, அமமுக, இப்போது செங்கோட்டையன் என அதிமுகவின் அவதாரங்களாக புதிது புதிதாக உதயமாகும் பல்வேறு தரப்பினரின் பெருமிதப் பேச்சுகள். இனி அரசியலுக்கு வரப்போவதே இல்லை என்று அறிவித்துவிட்ட ரஜினிகாந்த் கூட போயஸ் கார்டன் ஜெ. இல்லத்தில் அஞ்சலி செலுத்தி அளித்த பேட்டி, இன்னும் கட்சி கடந்தும், துறைகள் கடந்தும் பதிவாகும் ஜெயலலிதாவுக்கான புகழஞ்சலிகளும், சமூக வலைதள விதந்தோதலும், விமர்சனங்களும் ஜெயலலிதா இன்னமும் தமிழக அரசியலில் நினைவுகளால் நிலைத்திருக்கிறார் என்றே புரிந்துகொள்ளச் செய்கிறது. மேலும், ஜெயலலிதா எனும் ஆளுமையை தமிழகம் ‘மிஸ்’ செய்கிறதோ என்ற எண்ணத்தையும் எழச் செய்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்... - ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பரில் மறைந்தார். அவரது மறைவுக்குப் பின் முதல்வர் பதவி வெகு எளிதாக ஓபிஎஸ் கைகளுக்குச் சென்றாலும் அடுத்தடுத்த நிகழ்வுகள் அதிமுக ஜெயலலிதா எப்போதும் பெருமிதமாக சொல்லிக் கொள்ளும் ராணுவக் கட்டுப்பாடோடு இருக்கும் என்ற எதிர்பார்ப்பை கேள்விக்குறியாக்கியது. ஒரு கட்டத்தில் அந்த கேள்விக்குறிகூட மறைந்து கேலிக்கூத்தானது. ஓபிஎஸ் நீக்கம், இரு அணிகள் உருவாக்கம், இபிஎஸ்-க்கு முதல்வர் பதவி, சசிகலா சிறைவாசம், மீண்டும் ஓபிஎஸ் - இபிஎஸ் இணைப்பு என வரிசைகட்டியது சலசலப்புகள். சற்றே மீண்டெழத் தொடங்கிய வேளையில் மீண்டும் அதிகாரப் பகிர்வில் சர்ச்சை ஏற்பட்டு இபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவினை, அதிமுக அலுவலகம் சூறை, உள்ளடி வேலைகள் என பல பிரச்சினைகள் என்ற நிலைக்கு வந்துள்ளது அதிமுக.

Read Entire Article