பாலியல் குற்றங்களை முன்வைத்து பாஜகவுக்காக இபிஎஸ் மடைமாற்றும் அரசியல் செய்வதாக அமைச்சர் ரகுபதி சாடல்

4 months ago 16

சென்னை: “மும்மொழிக் கொள்கையை பாஜக புகுத்த முயற்சிக்கிறது. தமிழகத்துக்கு உரிய வரிப் பகிர்வு தருவதில்லை. மத்திய பட்ஜெட்டிலும் தமிழக திட்டங்கள் இல்லை. கல்விக்கு நிதி இல்லை. இப்போது பேரிடர் நிவாரணமும் இல்லை என தொடர்ந்து மோடி அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இதையெல்லாம் மடைமாற்றி தன்னுடைய பாஜகவின் ராஜ விஸ்வாசத்தை காட்டுகிறார் பழனிசாமி. மத்திய அரசுக்கு அவப்பெயர் வராமால் இருக்க பாலியல் வன்கொடுமை என்று சொல்லி மடைமாற்றும் அரசியல் உத்தியை செய்கிறார் பழனிசாமி” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலியல் புகார்களை வைத்து அரசின் மீது அவதூறு பரப்புவதே பழனிசாமிக்கு தொடர் கதையாகிவிட்டது. புகார் வந்ததும் விரைவாக விசாரித்து கைது நடவடிக்கை எடுக்கிறது காவல் துறை. ஆனால், பாதுகாப்பில்லை என சொல்லி பெண் குழந்தைகளை அச்சுறுத்துவதே பழனிசாமிக்கு வழக்கமாகிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததும் உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Read Entire Article