சென்னை: பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் நபர், குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்துமாறு உத்தரவிட கூடாது என்று சிறப்பு நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைனர் சிறுவர் - சிறுமி இடையிலான காதல் காரணமாக எழும் திருமண பந்தம் மற்றும் மைனர் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் மைனர் சிறுவர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பின்னர், சிறார் நீதி வாரியத்தில் விசாரணை நடத்தப்பட்டு, இறுதியாக கண்காணிப்பு இல்லங்களில் அடைக்கப்படுகின்றனர்.