பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகளுக்கு உதவி எண்: அரசு பரிசீலிக்க உத்தரவு

2 months ago 10

மதுரை: மதுரையைச் சேர்ந்த டி.செந்தில், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாட்டில் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் வகையிலும், பள்ளிப் பாடத்திட்டத்தில் குழந்தைகள் உதவி எண்களை குறிப்பிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியா கிளெட் ஆகியோர் “பள்ளி அளவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மனுதாரர் அனுப்பிய மனுவை தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குநர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

The post பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகளுக்கு உதவி எண்: அரசு பரிசீலிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article