பாலத்தில் இருந்து விழுந்தவர் பலி

2 hours ago 2

திருப்புத்தூர், அக்.9: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் பகுதியில், பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார். திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் பாலகணபதி(33). கூலி வேலை செய்து வந்தார். இவர், வேலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் நேற்று பட்டமங்கலம் அருகே வெளியாரி விலக்கு ரோடு பகுதி பாலத்தின் கீழ் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணையில், பாலத்தில் இருந்து கீழே தவறி விழுந்திருக்கலாம் என தெரிவித்தனர். இதுகுறித்து திருக்கஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாலத்தில் இருந்து விழுந்தவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article