பாலக்காடு, மே 31: பாலக்காடு – மலம்புழா முக்கிய சாலையில் கடுக்காம்குன்று அருகே முக்கை ஆற்றின் குறுக்கே நிலம்பதிப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தில் அதிகளவில் ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழை வெள்ளம் வந்தால் நிலப்பாலத்திற்கு மேல் செல்கின்றது.
இதன் காரணமாக சில நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மலம்புழா அணையில் இருந்து எந்த நேரங்களிலும் உபரிநீர் திறந்து விடப்படலாம்.
ஆகாயத்தாமரைகள் அதிகளவில் பாலத்தின் அருகாமையிலும் படர்ந்ததால் நிலப்பாலத்தின் கண்கள் வழியாக அடைப்புகள் ஏற்படுகின்றது. இவற்றை உடனடியாக நீக்கம் செய்யா விட்டால் மழை வெள்ள சேதங்கள் ஏற்படக்கூடும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கை கையாண்டு வருகின்றனர். மலம்புழா கிராம பஞ்சாயத்து தலைவர் ராதிகா மாதவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், தீயணைப்பு வீரர்கள், ஊராட்சி அதிகாரிகள், நீர்வளப்பாசனத்துறை அதிகாரிகள், காவலர்கள், அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்று மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
The post பாலக்காடு-மலம்புழா சாலையில் தரை மட்ட பாலத்தில் படர்ந்த ஆகாய தாமரைகள் அகற்றும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.