பாலக்காடு அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் போலீசில் சிக்கினர்

1 week ago 2

பாலக்காடு : பாலக்காடு அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் போலீசாரிடம் பிடிபட்டனர். பாலக்காடு மாவட்டம், புதுச்சேரி கசபா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான புதுச்சேரி அருகே வேனோலியை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் பைக் திருட்டுப்போனது. இது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கசபா இன்ஸ்பெக்டர் சுஜித் தலைமையில் போலீசார் சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தனர். இதில் கஞ்சிக்கோடு அடுத்த சுள்ளிமடாவை சேர்ந்த தேவன் (28), அகில் (எ) கண்ணன் (23), ஆகியோர் பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் கசபா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், இது தொடர்பான வழக்கில் சித்தூர் அத்திக்கோடு வேப்பன்கோட்டை சேர்ந்த அஜீஷ் (29) ஏற்கனவே கைதாகியுள்ளார். இந்நிலையில் திருட்டுப்போன பைக் அஜிஷ் என்பவரின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்ததை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

பைக் திருட்டு வழக்கில் சம்பந்தமுடைய 3 பேரும் மேலும், ஏதாவது வழக்கில் சம்பந்தமுடையவர்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பாலக்காடு அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் போலீசில் சிக்கினர் appeared first on Dinakaran.

Read Entire Article