
மாட்ரிட்,
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12-ந்தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டா, கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.