கில், ஜெய்ஸ்வால் சதம்....முதல் நாள் முடிவில் இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு

3 hours ago 2

லீட்ஸ்,

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைதொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் ஜோடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு தண்ணி காட்டினர். 24.5 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. கே.எல். ராகுல் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரைடன் கார்ஸ் இங்கிலாந்து அணிக்கு முதல் விக்கெட்டை கைப்பற்றி கொடுத்தார்.

அடுத்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுக வீரரான சாய் சுதர்சன் களமிறங்கினார். ரசிகர்களின் பெருமளவு ஆதரவுக்கு மத்தியில் களமிறங்கிய அவர் 4 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

தொடர்ந்து கில் களமிறங்கினார். கில், ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். நிலைத்து ஆடிய கில் அரைசதமடித்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார்.

அவர் 101 ரன்களில் வெளியேறினார் . தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் நிலைத்து ஆடினார். கில், பண்ட் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .கில் சதமடித்து அசத்தினார் . ரிஷப் பண்ட் அரைசதமடித்தார் . இறுதியில் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது. கில் 127 ரன்களும் , பண்ட் 65 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். 

Read Entire Article