பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை பிப்.11-ல் திறக்க ஏற்பாடு தீவிரம்

3 months ago 19

மதுரை: ராமேசுவரத்தில் அமைந்துள்ள பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை பிப்ரவரி 11-ல் திறக்க ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாகியுள்ளன. புதிய பாலத்தில் முதல் ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் - மண்டபம் இடையே பாம்பன் கடலில் ஏற்கெனவே இருந்த பழைய தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதிய பாலம் அமைக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக 2022-ல் அப்பாலத்தில் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் தடை செய்தது. தொடர்ந்து 2023 பிப்ரவரி முதல் பழைய பாலத்தில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையம் வரையிலுமே இயக்கப்பட்டன.

Read Entire Article