பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். திறப்பு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் தெரிவித்தார்.
பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டுவதற்காக 2019 மார்ச் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். பாம்பன் புதிய பாலத்தின் பணிகள் முற்றிலும் நிறைவடைந்தது. இந்நிலையில், புதிய ரயில் பாலம் மற்றும் ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: