மதுரை: “பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் பங்கேற்காமல் பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவமதித்துள்ளார். இதற்காக தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும்.” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலம் திறப்பு விழாவில் பங்கேற்ற பின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமேஸ்வரம் விழாவில் பிரதமர் மோடி ரூ.8300 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளார். ராமநவமி நாளில் ரூ.580 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளவில்லை. இதற்காக முதல்வர் சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாது.