மதுரை: ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பாம்பன் பாலம் திறப்பு விழாவில் பாஜக மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்ற நிலையில், நெல்லை பாஜக எம்எல்ஏவான நயினார் நாகேந்திரனுக்கு திடீர் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது பாஜகவில் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக பாஜக தலைவராக தற்போது இருக்கும் அண்ணாமலை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவார் என கட்சி வாரங்களில் கூறப்பட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராமேஸ்வரத்தில் நடைபெற்ற புதிய பாம்பன் பாலம் திறப்பு விழா அமைந்திருந்தது.