சென்னை: வேளாண் துறையின் வளர்ச்சியில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை இந்நிதிநிலை அறிக்கை தெளிவு படுத்துகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனினும், வேளாண் பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் 1,000 இடங்களில் உழவர் நலச் சேவை மையங்கள் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்பை அவர் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 1,000 உழவர் நலச் சேவை மையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும், கோடை உழவு ஊக்குவிக்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான பாசனத் திட்டங்களை செயல்படுத்த எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அறிவிக்காதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.