புதுச்சேரி: பாமக மாநாட்டை ஒட்டி புதுச்சேரியில் நாளை பகல் 1 மணிக்குள் மதுப்பானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மதுபானக் கடை, கள்ளு கடைகளை மூட கலால் துறை துணை ஆணையர் மேத்யூ உத்தரவிட்டார். பாமக மாநாட்டுக்கு தென் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பாமக முழு நிலவு சித்திரை மாநாடு நாளை நடைபெற உள்ளது.
The post பாமக மாநாட்டை ஒட்டி புதுச்சேரியில் நாளை பகல் 1 மணிக்குள் மதுப்பானக் கடைகளை மூட உத்தரவு appeared first on Dinakaran.