சென்னை: ரயிலில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ரயில்களில் ஏழைகளால் குளிர்சாதன பெட்டிகளில் பயணிக்க முடியாது. சேரன் விரைவுரயில், திருவனந்தபுரம் மெயில், நீலகிரி விரைவு ரயிலில் படுக்கை வசதி உடைய பெட்டியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை விரைவு ரயில், பொதிகை ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே முடிவு செய்யப்பட்டுள்ளது. படுக்கை வசதி உடைய பெட்டியை குறைநத்து குளிர்சாதன பெட்டியை சேர்க்க ரயில்வே முடிவு செய்தது கண்டிக்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
The post ரயிலில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.