பாபநாசம் தாலுகாவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு

2 weeks ago 2

கும்பகோணம், ஜன.24: கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகாவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தற்சமயம் சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையின் இறுதி பகுதியாக கடந்த வாரம் திடீர் மழை பெய்தது. இந்த மழையினால் அறுவடை செய்த சம்பா பருவ நெல்லில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதில் 22 சதவீதம் வரை ஈரமுள்ள நெல்லை வாங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்க அனுமதிக்கும்படி ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதனை ஆய்வு செய்யும் வகையில் மத்திய குழுவினர் நேற்று முன்தினம் முதல் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவில் உள்ள அருள்மொழிபேட்டை, இராரா முத்திரைகோட்டை, கோவிலூர் ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மத்திய குழு அலுவலர்களான நவீன் ப்ரீத்தி, ராகுல் மற்றும் அபிஷேக் பாண்டே ஆகியோர் கொள்முதல் நிலையங்களில் வந்துள்ள நெல்லின் ஈரப்பதம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

The post பாபநாசம் தாலுகாவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article