டெல்லி : பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை ஆலோசனை நடத்தி வருகிறது. பிரதமர் மோடி இல்லத்தில் நடக்கும் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக விவாதம் நடைபெற உள்ளது. தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
The post பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை ஆலோசனை!! appeared first on Dinakaran.