பாடாலூர், ஏப்.24: பாடாலூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா ஆலத்தூர்கேட் கிராமத்தை நல்லு மகன் அண்ணாதுரை (60); கூலி தொழிலாளி. இவர், கடந்த 20ம் தேதி இரவு மதுபோதையில் இருந்தபோது, வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே, அவரது உறவினர்கள், கிராமத்தினர் அவரை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். நேற்று, முன்தினம் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தபோது, அவர் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பாடாலூர் போலீசார் அண்ணாதுரை உடலை கைப்பற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பாடாலூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி சாவு appeared first on Dinakaran.